என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி கவிழ்ந்து விபத்து
    X

    லாரி கவிழ்ந்து விபத்து

    • திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக டிரைவர் பிரபு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    மத்தூர்,

    ஆந்திரா மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் பகுதிக்கு பழைய பேப்பர் லோடு ஏற்றி சென்ற லாரி ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த லாரியை சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பிரபு (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார்.

    அந்த லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை-சேலம் செல்லும் சாலையில் வெப்பாலம் பட்டி என்ற பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக டிரைவர் பிரபு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே ஓடி வந்து விபத்தில் சிக்கிய டிரைவர் பிரபுவை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து சாலையின் நடுவே கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நடந்த விபத்து இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×