என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சரக்கு வாகனம் மோதி விவசாயி பரிதாப சாவு
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (60). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை நாகலாபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்பொழுது அந்த வழியாக அரியலூர் மாவட்டம் ஓரியூர் கிராமத்தை சேர்ந்த வினோத் (35) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக சக்திவேலின் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சக்திவேலின் மகள் மகாலட்சுமி (32) என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார், டிரைவர் வினோத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துறையூர் அருகே சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்