என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம்
    X

    திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம்

    • சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்
    • 50 பேர் திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு புகார் அளிக்க வந்தனர்.

    கே.கே. நகர்,

    திருச்சி மாநகர், மாவட்ட அ.தி.மு.க செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியும், பிளக்ஸ் பேனர் வைத்தும், சுவர்களில் எழுதியும் அ.தி.மு.க.வினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிதது வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி மாநகர் ஏர்போர்ட் பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி தலைமையில் திருச்சி விமான நிலையத்தின் எதிரில் உள்ள அரசு சுகாதாரத்துறை பணிமனை வளாக சுவற்றில் வாழ்த்து தெரிவித்து அ.தி.மு.க. வினரால் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு, பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி பெயர் மட்டும் சமூக விரோதிகளால் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 65-வது வார்டு அ.தி.மு.க. வட்ட செயலாளர் விநாயகமூர்த்தி தலைமையில் சுமார் 50 பேர் திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு புகார் அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காவல்துறையினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அ.தி.மு.க.வின் இந்த திடீர் போராட்டம் காரணமாக ஏர்போர்ட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×