search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் மீது இரு சக்கர வாகனம் மோதியவிபத்தில் ஒருவர் பலி
    X

    கார் மீது இரு சக்கர வாகனம் மோதியவிபத்தில் ஒருவர் பலி

    கார் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி - இருவர் படுகாயம்

    உப்பிலியபுரம்

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள மங்கப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பெட்ரோல் பங்க் அருகே இன்று காலை தம்மம்பட்டியில் இருந்து கொப்பம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென வலது பக்கம் திரும்பியதால் பின்னால் வந்து கொண்டிருந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    இதனிடையே விபத்துக்குள்ளான கார் எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் கால் எலும்பு முறிவடைந்தது. தகவலின் பேரில் உப்பிலியபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், செபாஸ்டின் சந்தியாகு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர் விபத்து பற்றி உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

    Next Story
    ×