என் மலர்
உள்ளூர் செய்திகள்

கணவன் இறந்த துக்கத்தால் மின் விசிறியில் தூக்கு போட்டு பெண் தற்கொலை
- சமயபுரம் அருகே கணவன் இறந்த துக்கத்தால் மின் விசிறியில் தூக்கு போட்டு பெண் தற்கொலை
- தூக்கு போட்டு பெண் தற்கொலை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
மண்ணச்சநல்லூர்,
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து கோணலை காணிக்கை மாதா நகர் கல்பாளையத்தை சேர்ந்தவர் ஜெனிபர் வயது (31) அப்பகுதியில் உள்ள கிங்ஸ்லி ரூபன் என்பவரிடம் கடந்த நான்கு வருடங்களாக கூலிவேலை செய்து வருகிறார். ஜெனிபருக்கு மூன்று மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
அனைவரும் ஒரே வீட்டில் கல்பாளையத்தில் வசித்து வந்தனர். இவரது தாயார் ஜூலி சகாயமேரி (52) இவரது கணவர் அப்பாத்துரை 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதிலிருந்து மன உளைச்சலில் இருந்து வந்த ஜூலிசகாய மேரி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது முதலாளியை பார்த்து விட்டு வருவதற்காக சென்று இருந்த அவரது மகன் மனைவி ஆகிய இருவரும் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது தாயார் தூக்கில் தொங்குவதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருவரங்கம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.






