search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக் காதல் தகராறில் பெண் தீக்குளிப்பு
    X

    கள்ளக் காதல் தகராறில் பெண் தீக்குளிப்பு

    • கிருஷ்ண குமாருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கனகவள்ளிக்கு தெரியவந்தது.
    • இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட கனகவள்ளி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்

    திருச்சி :

    திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை பெல்சி கிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கனகவள்ளி (25) இவர் திருச்சி மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் கிருஷ்ண குமாருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கனகவள்ளிக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் கிருஷ்ணகுமார் மனைவி கனகவள்ளியை தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட கனகவள்ளி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்த தீ விபத்தில் பலத்த காயமடைந்த கனகவள்ளி ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து கனகவள்ளி பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கணவன் கிருஷ்ணகுமார் மீது தற்கொலை முயற்சிக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×