என் மலர்
உள்ளூர் செய்திகள்

விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை
- திருச்சியில் விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கணவரின் நண்பர் மீது புகார்
- கோட்டை பெண் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது
திருச்சி,
திருச்சி பாலக்கரை கான் மியான் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம். இவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து போனார். உடல் நலக்குறைவால் அவர் வீட்டில் இருந்தபோது உறையூர் நாடார் தெருவை சேர்ந்த ரஃபீக் ராஜா (வயது 42) என்ற அவரது நண்பர் அவ்வப்போது வீட்டுக்கு வந்து சென்றார்.இதில் ரபிக் ராஜாவுக்கும் சையது இப்ராஹீமின் மனைவி பாத்திமா (35) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளத்தொடர்பாக மாறியது.பின்னர் தனது திருமண வயது மகளின் எதிர்காலத்தை நினைத்து ரபீக் ராஜாவுடன் இருந்த தொடர்பை பாத்திமா துண்டித்தார்.ஆனால் இதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.இந்த நிலையில் குடிபோதையில் அடிக்கடி பாத்திமா வீட்டுக்கு சென்று இரவு நேரங்களில் அவரது வீட்டின் கதவை தட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பாத்திமா கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் வழக்கு பதிவு செய்து ரபிக் ராஜாவை கைது செய்தனர்.






