search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடையாளம் தெரியாத ஆண் பிணம்
    X

    அடையாளம் தெரியாத ஆண் பிணம்

    • திருச்சி உறையூரில் அடையாளம் தெரியாத ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் பிணம்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    திருச்சி,

    திருச்சி உறையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட உறையூர் ராமலிங்க நகர் 2-வது மெயின் ரோடு அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர், முகவரி தெரியாத ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் அவர் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்தரை அடி உயரம் கொண்ட அவர் சிவப்பு நிற அரைக்கால் டவுசர், சிவப்பு நி அரைஞான் கயிறு கட்டியிருந்தார். இடது இடுப்பில் கருப்பு புள்ளி மச்சம், இடது நெற்றியில் காயத்தழும்பு காணப்பட்டது. இதுகுறித்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×