என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஐ.நா. அறிவிப்பை ஆதரிக்கும் விதமாக மத்திய அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை கொண்டு வர வேண்டும்-தமிழக ஏரி ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
- ஐ.நா. அறிவிப்பை ஆதரிக்கும் விதமாக மத்திய அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை கொண்டு வர வேண்டும் என தமிழக ஏரி ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்
- இந்தியாவில் வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தவும், பாரம்பரிய உணவுகளை பாது–காக்கவும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருச்சி:
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயி–கள் சங்க மாநில தலைவர் பூரா.விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-உலகெங்கும் வாழும் மக்கள் சர்க்கரை நோய், இதய நோய், வாத நோய், எலும்புருக்கி நோய் போன்ற தீராத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் நோய் எதிர்ப்பு சக்தி தரும் பாரம்பரிய உணவு உற்பத்தி இல்லாததே காரணம் என்பதை ஐ.நா. பொது சபை நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதைத்தொடர்ந்து அதி–கம் விவசாயத்தை மேற்கொள்ளும் நாடுகள் சிறு–தானிய உணவு பொருட்களை பயிர் செய்யும் ஆண்டாக 2023-ம் ஆண்டினை ஐ.நா. சபை அறிவித்துள்ளது வர–வேற்கத்தக்கது. கேழ்வரகு, கம்பு, வரகு, சின்ன சோளம், தினை, சாமை, குதிரைவாலி, கொள்ளு, எள்ளு, துவரை, கொத்தமல்லி போன்ற சிறுதானியங்கள் மனித உயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வல்லமை கொண்டது.
எனவே இந்தியாவில் வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தவும், பாரம்பரிய உணவுகளை பாது–காக்கவும் பிரதமர் நடவ–டிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக 2023 ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக ஐ.நா. பொது சபை அறிவிப்பை ஆதரிக்கும் விதமாக விவசா–யிகளின் நலன்கருதி இந்தி–யாவில் சிறுதானிய பயிர்களை உற்பத்தி செய்து தீராத பல நோய்களிலிருந்து நாட்டு மக்களையும், விவசாயிக–ளையும் காப்பாற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேளாண்மைக்கு என தனி பட்ஜெட்டை கொண்டு வர–வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.