என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண் அதிகாரியிடம் துணிகர திருட்டு
- தனது மணிபர்சை மேஜை மீது வைத்து விட்டு அலுவலக வேலையாக பக்கத்து அறைக்கு சென்றார்.
- அப்போது மர்ம நபர் ஒருவர் அலுவலகத்திற்குள் புகுந்து மணி பர்ஸை திருடிவிட்டு சென்றார்.
திருச்சி
திருச்சி கலெக்டர் அலுவலக குற்ற மேலாளர் அலுவலகத்தில் மேலாளராக இருப்பவர் சண்முகசுந்தரி (வயது 49).
இவர் தனது மணிபர்சை மேஜை மீது வைத்து விட்டு அலுவலக வேலையாக பக்கத்து அறைக்கு சென்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் அலுவலகத்திற்குள் புகுந்து மணி பர்ஸை திருடிவிட்டு சென்றார். அதில் ரூ. 9 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு, டெபிட் கார்டு போன்றவை இருந்தது.
இதுகுறித்து அவர் செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிகாரியின் மணி பசை திருடிய நாமக்கல் பரமத்தி வேலூர் வெட்டிக்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் ராஜா என்பவரை கைது செய்து பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story






