search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - எஸ்.பி வருண்குமார் அதிரடி
    X

    கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - எஸ்.பி வருண்குமார் அதிரடி

    • இவர் மீது துறையூர் உள்ளிட்ட பல்வேறு போ லீஸ் நிலையங்களில் அடி தடி,கொலை,கஞ்சா கடத்து தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவை யில் உள்ளது.
    • திருச்சி கலெக்டர் பிரதீப்கு மார் வினோத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்

    துறையூர்

    திருச்சி மாவட்டம் துறை யூர் அருகே உள்ள அடிவாரப் பகுதியை சேர்ந்தவர் வினோத் (45).

    இவர் மீது துறையூர் உள்ளிட்ட பல்வேறு போ லீஸ் நிலையங்களில் அடி தடி,கொலை,கஞ்சா கடத்து தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவை யில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு வினோத்தும் அவரது கூட்டாளிகளான நந்தகு மார் (25), வெங்க டேசன் (27), சிவா (31), ராசாத்தி (42) ஆகிய 5 பேரும் சேர்ந்து, அடிவார பகுதியை சேர்ந்த விஜய் (20) என்கிற வாலிபரை கொலை செய்து, உடலை பச்சை மலையில் உள்ள தோட்டம் ஒன்றில் புதைத்து வைத்த னர்.

    இந்த வழக்கில் 5 பேரை யும் கைது செய்த துறையூர் போலீசார் அவர்களை சிறையில் அடைத்து இருந்த னர். இந்நிலையில் வினோ த்தை குண்டர் தடுப்பு ச ட்டத்தில் கைது செய்ய து றையூர் போலீஸ் ஆய்வாளர் செந்தில்குமார், முசிறி டி.எஸ்.பி. யாஸ்மின் ஆகியோர் மாவட்ட எஸ்.பி. வ ருண்குமாருக்கு பரிந்து ரைத்தனர்.

    எஸ்.பி வருண் குமாரின் பரிந்துரையின் பேரில், திருச்சி கலெக்டர் பிரதீப்கு மார் வினோத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இத னைத் தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்த ரவு நகலை, சிறைத்துறை போலீசார் மூலம் வினோ த்திடம் துறையூர் போலீசார் அளித்தனர்.

    Next Story
    ×