search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
    X

    சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

    • பிரேக்கர் எந்திரம் மூலம் உடைத்தபோது சம்பவம்
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    திருச்சி,

    மன்னச்சநல்லூர் மேற்கு சமயபுரம் எஸ். கண்ணனூர் ஹரிஜனதெரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 27) இவர் சமீபத்தில் பிரேக்கர் எந்திரம் ஒன்று வாங்கியுள்ளார்.

    இதனைக் கொண்டு பழைய வீடுகள் மற்றும் சுவர்களை உடைக்கும் பணிகளுக்கு சென்று வந்தார். வழக்கம்போல் எடுமலை முஸ்லிம் தெருவில் உள்ள ஒருவரது வீட்டில் அந்த பிரேக்கர் எந்திரம் மூலம் சுவற்றினை உடைத்துக் கொண்டு இருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து தினேஷ்குமார் கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தினேஷ் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அவரது தாயார் சகுந்தலா சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×