search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமயபுரம் உண்டியல்  திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது
    X

    சமயபுரம் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது

    • திருச்சி சமயபுரம் உண்டியல் எண்ணப்பட்டத்தில், ரூ.85 லட்சம், 2.5 கிலோ தங்கம் காணிக்கை பெறப்பட்டது.
    • உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

    திருச்சி,

    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் அந்த வண்ணம் இருப்பர். இவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்கள் மூலம் தங்கள் காணிக்கைகளை செலுத்துவார்கள். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பாக மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் முதல் முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக ரூ.85 லட்சத்து 189 ரொக்கமும், 2 கிலோ 553 கிராம் தங்கமும், 2 கிலோ 837 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

    Next Story
    ×