search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது- வருகிற 18-ந்தேதி தேரோட்டம்
    • இன்று காலை 7.20 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளினார்.

    மண்ணச்சநல்லூர்,

    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். ஆண்டின் அனைத்து நாட்களிலும் இங்கு உள் ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.இக்கோவிலில், ஒவ் வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேர்த்தி–ருவிழா இன்று கொடயேற்றத்துடன் தொடங்கி–யது.

    இதை–யொட்டி இன்று காலை 7.20 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளினார்.பின்னர் 7.41 மணிக்கு கொடியேற்றம் நடைபெற் றது. கோவில் குருக்கள் கொடிமரத்தில் அம்மன் படம் பொறித்த கொடியை ஏற்றி வைத்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இதேபோன்று ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். மேலும் தினமும் இரவு 8 மணிக்கு சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன , ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், மரகுதிரை வாகனம் உள்ளிட்ட பல் வேறு வாகனங்களில் கோவிலை வலம் வந்து பக்தர்க–ளுக்கு காட்சி தருகி–றார்.வருகிற 17-ந்தேதி அம் மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வழிநடை கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18-ந்தேதி (செவ் வாய்க்கிழமை) நடைபெறு–கிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளுகிறார்.அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித் தல் நிகழ்ச்சி நடைபெறு–கிறது. இதில் லட்சக்கணக் கான பக்தர்கள் கலந்து–கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 19-ந்தேதி அம்மன் வெள்ளி காம–தேனு வாகனத்தில் புறப்பாடா–கிறார். 20-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப் பாடாகிறார்.

    21-ந்தேதி மாலை அம்மனுக்கு அபி–ஷேகமும், இரவு 8 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப–உற்சவ தீபாரா–தனையும் நடைபெறுகிறது.25-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்திலும் புறப்பாடாகிறார். விழா–விற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி, மணிகாரர் பழனி–வேல் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


    Next Story
    ×