search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு
    X

    ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு

    • லால்குடி அருகே ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு
    • தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்று மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்பர்மோகன்ராஜ் இவருக்கு ஆண்டோ, புதின் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஆண்டோ (வயது 17). மற்றும் தனது நண்பர்கள் மூன்று பேருடன் கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை குளிக்க சென்றுள்ளனர். ஆன்டோ மற்றும் நண்பர்கள் மூன்று பேரும் ஆற்றில் குளிக்க இறங்கிய நிலையில் மற்ற இருவரும் ஆற்றின் கரையில் மேலே வந்து விட்டனர். இதில் ஆழ மிகுதியான இடத்தில் மாட்டிக் கொண்ட ஆண்டோ தண்ணீரில் தத்தளித்த நிலையில் நிலை தடுமாறி நீரில் மூழ்கி மேலே கையை உயர்த்தி உள்ளார். தண்ணீர் இழுத்து சென்றதை அறிந்த நண்பர்கள் உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கவே இதுகுறித்து லால்குடி தீயணைப்பு துறைக்கும், லால்குடி காவல் நிலையத்திற்கும், ஆண்டோவின் தந்தை மற்றும் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர் இதனை அடுத்து லால்குடி தீயணைப்பு துறையினர் மற்றும் உறவினர்கள் நீரில் மூழ்கிய ஆண்டோவின் உடலை லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் தேடி வந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டது.உடற்கூறு ஆய்விற்காக லாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×