என் மலர்
உள்ளூர் செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் தற்கொலை
- திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் வயிற்று வலி தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- உடலை கைப்பற்றி கே.கே.நகர் போலீசார் விசாரணை
திருச்சி,
திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகர், சிவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது அவரது மகன் முகமது யூசுப் வயது 20 இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வைத்து வலியால் அவதிப்பட்டு வந்தார் இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார் இருந்தபோதிலும் நோயின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட இயலவில்லை இந்த நிலையில் நேற்று வீட்டிலிருந்து முகமது யூசுப் வெகு நேரமாகியும் தூங்காமல் இருந்தால் அப்போது அவரது தாயார் மும்தாஜ் பேகம் ஏன் இதுவரை தூங்காமல் இருக்கிறாய் என கேட்டார். உடனே அறைக்குள் சென்ற முகமது யூசுப் பெற்றோர் துவங்கிய பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து மும்தாஜ் பேகம் கேகே நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






