search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி
    X

    புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி

    • சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சாலையை கடக்க முயன்ற மான் பலி
    • வனத்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் இரவு நேரத்தில் மேய்ச்சலுக்காக வந்த புள்ளி ஆண் மான் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த புள்ளி மான் உடல் நசுங்கி உயிரிழந்தது. இதுபற்றி அங்கு வந்த இரவு நேர ரோந்து போலீசார் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எம்.ஆர்.பாளையம் வன பாதுகாவலர் ஜான் ஜோசப் சாலையில் கிடந்த மானை மீட்டு உடற்கூற் ஆய்வுக்காக ஆட்டோ மூலம் எம்.ஆர்.பாளையம் வனப்பகுதிக்கு எடுத்துச் சென்றார்.

    Next Story
    ×