என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொன்மலையில் பரபரப்பு சம்பவம் ரயில்வே குடியிருப்பில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர் போலீசார் விசாரணை
- பொன்மலையில் பரபரப்பு சம்பவம்
- ரயில்வே குடியிருப்பில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
- போலீசார் விசாரணை
திருச்சி
திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரண் அற்புதராஜ் (வயது 22).திருமணமாகதவர். இவர் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மற்றும் கட்டிடம் இடிக்கும் பணிகளை செய்து வந்தார்.மேலும் இவர் போதை பழகத்திற்கு அடிமை யானவர் என்று கூறப்படுகிறது. இவர் வீட்டில் தாயிடம் கோபித்து கொண்டு பழைய ரெயில்வே குடியிருப்பு பகுதி கட்டிடத்தில் இரும்பு கூரையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருச்சி சங்கிலியாண்ட புரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் (54)திருமணம் ஆகாத இவர் சில நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்த நிலையில் குளியல் அறையில் இருந்த ஆசிட்டை குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி லாரன்ஸ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்