சத்திரம் பஸ் நிலையத்தில் 2 மாநகராட்சி கடைகளுக்கு சீல்

சத்திரம் பஸ் நிலையத்தில் 2 மாநகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கபட்டுள்துவாடகை செலுத்தாததால் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்
சத்திரம் பஸ் நிலையத்தில் 2 மாநகராட்சி கடைகளுக்கு சீல்
Published on

திருச்சி,

திருச்சி மாநகராட்சி சத்திரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 30 -க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வாடகை செலுத்தாமல் உள்ள 12 கடைகளை சீல் வைத்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டார். அதன்படி வாடகை நிலுவையில் உள்ள கடைகளை இன்று மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் சிவசங்கர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர்கள் பிச்சைமணி, செந்தில்குமார், ராஜேந்திரன் மற்றும் வரித்தண்டளர்கள் கொண்ட குழு கடைகளை பூட்டி சீல் வைத்தார்கள்.பின்னர் அவர்கள் தெரிவிக்கையில், வாடகை பாக்கி வைத்திருக்கும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com