search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 25 லட்சம் உண்டியல் காணிக்கை
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 25 லட்சம் உண்டியல் காணிக்கை

    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 25 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது
    • 3 கிலோ 973 கிராம் தங்கமும் கிடைத்தது

    மண்ணச்சநல்லூர்:

    சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்கும் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் மாதமிருமுறை எண்ணப்படுகின்றன. கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. திருக்கோவில் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் உண்டியல் பணத்தை எண்ணி தங்கம், வெள்ளி நகைகள், அயல்நாட்டு கரன்சிகளை கணக்கெடுத்தனர். கணக்கெடுப்பின் முடிவில் உண்டியலில் ரொக்கமாக ரூ.1 கோடியே 25 லட்சத்து 50 ஆயிரத்து 687 பணம், 3 கிலோ 973 கிராம் தங்க நகைகள், 7 கிலோ 645 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன. இவை அனைத்தும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன.

    Next Story
    ×