என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்
- உப்பிலியபுரம் பகுதியில் விட்டு விட்டு வெளுத்து வாங்கியது
- கன மழையால் நெற்பயிர்கள் சாய்ந்தது
திருச்சி:
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.அதன்படி நேற்று பிற்பகல் முதல் பெரும்பாலான மாவட்டங்களில் விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை முதல் இரவு விடிய, விடிய பாட்டம் பாட்டமாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் காற்றுடன் மழை கொட்டியது.இதில் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன. இந்த பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் சம்பா பயிரிட்டுள்ளனர். அதிலும் பணப்பயிராக கருதப்படும் சீரக சம்பா நெல் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.இதுவே உப்பிலியபுரம் பகுதி விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டித்தரும் விவசாய பயிராகும். நெற்பயிர்கள் பூட்டு வாங்கியுள்ள நிலையில், மழை பெய்ததால் அவை அனைத்தும் சாய்ந்துள்ளதாக தெரிவித்த தங்கநகர் பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணன் கூறுகையில், இந்த ஆண்டு நெல் மகசூல் கேள்விக்குரியதாகி உள்ளது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்