என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சி ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு
- போலீசாரை தாக்கி தப்பிக்க முயற்சித்த போது துப்பாக்கி சூடு
- 5 கொலை வழக்கு உள்ளிட்ட 64 வழக்குகள் உள்ள ரவுடிகள்...
திருச்சி,
திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி துரைராஜ் என்கிற துரை. இவர் மீது 5 கொலை வழக்கு உள்ளிட்ட 64 வழக்குகள் உள்ளன. இவரின் சகோதரர் சோமு. திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பகுதிைய சேர்ந்த மற்றொரு ரவுடி இளவரசன் என்பவர் புதுக்கோட்டை கோர்ட்டில் வழக்கு ஒன்றில் ஆஜராகி திரும்பி வந்தபோது 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய கொலையாளியான துரைராஜை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் போலீசாரிடம் சிக்கிய துரைராஜ் மற்றும் அவரது சகோதரர் சோமு ஆகியோரை உறையூர் குற்றப்பிரிவு போலீசார் பிடித்துள்ளனர். அவரிடம் கொள்ளையடித்த பொருட்களை மீட்பதற்காக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது துரையின் உறவினர் அனுராதா என்பவரிடம் கொள்ளையடித்த பொருட்களை கொடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதனை மீட்பதற்காக போலீஸ் வாகனத்தில் துரையையும், சோமுவையும் உறையூர் குற்றப்பிரிவு பிரிவை சேர்ந்த போலீசார் மோகன் உள்ளிட்ட போலீசார் அழைத்து சென்றனர். போலீஸ் வாகனத்தை சிற்றரவு ஓட்டிச்சென்றுள்ளார். போலீஸ் வாகனமானது புத்துார் குழுமாயி அம்மன் கோயில் கலிங்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது தப்பிச்செல்லும் நோக்கத்தில் துரை டிரைவர் சிற்றரசு கழுத்தை பிடித்து நெறித்து உள்ளார். இதனால் போலீஸ் நிலை தடுமாறி உள்ளது. விபத்து நடப்பதற்கு முன்பாக வாகனத்தை சிற்றரசு நிறுத்தி உள்ளார். இந்த நேரத்தை பயன்படுத்தி ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை பயன்படுத்தி துரையும், சோமுவும் போலீசாரை வெட்டி உள்ளனர். இதில் மோகன் மற்றும் சிற்றரசு ஆகிய போலீசார் காயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மோகன் தான் பாதுகாப்பிற்கு வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எச்சரித்துள்ளார். ஆனால் அதனையும் மீறி இருவரும் போலீசாரை தாக்க எந்தனிக்கவே மோகன் தனது துப்பாக்கியால் 3 முறை சுட்டு உள்ளார். இதில் ரவுடிகள் இருவருக்கும் கால்களில் குண்டு பாய்ந்துள்ளது. இதனை தொடர்ந்து ரவுடிகளை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். காயமடைந்த போலீசாரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவ இடத்திலும் திருச்சி அரசு மருத்துவமனையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.இன்று காலையிலேயே துரையின் தாயார் மல்லிகா, தனது மகனை எண்கவுன்டர் செய்வதற்காக போலீசார் கைது செய்துள்ளனர் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா–வுக்கு புகார் மனு அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்