என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியமங்கலத்தில் பிளஸ்-1 மாணவி மாயம்
- அரியமங்கலத்தில் பிளஸ்-1 மாணவி மாயமானார்
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அகிலாண்டஸ்வரியை தேடி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் ஜின்னா தெருவை சேர்ந்தவர் ஒய்யண்ணன். இவரது மகள் அகிலாண்டேஸ்வரி (வயது 17). இவர் தேனி மாவட்டம் தருமத்துப்பட்டி அருகே உள்ள ஆடிப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று தந்தை வீட்டிற்கு வந்த அகிலாண்டேஸ்வரி திடீரென்று மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை ஒய்யண்ணன் அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அகிலாண்டஸ்வரியை தேடி வருகின்றனர்.
Next Story