என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நர்ஸ் தூக்கு போட்டு தற்கொலை
    X

    நர்ஸ் தூக்கு போட்டு தற்கொலை

    • திருச்சியில் நர்ஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி.

    திருச்சி ஏர்போர்ட் அண்ணா நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் விக்னேஸ்வரி (வயது 23). இவர் திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த விக்னேஸ்வரி மன உளைச்சலில் காணப்பட்டார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறைக்கு சென்று மின்விசிறியில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×