search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிகண்டம் அருகே அளுந்தூரில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு போட்டி
    X

    மணிகண்டம் அருகே அளுந்தூரில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு போட்டி

    • மணிகண்டம் அருகே அளுந்தூரில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது
    • போட்டியில் சுமார் 600 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் 207 பேர் கலந்து கொள்கின்ற–னர்

    ராம்ஜிநகர்

    திருச்சி மாவட்டம் மணி–கண்டம் அருகே உள்ள அளுந்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தானா முளைத்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு வருடம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடை–பெறுவது வழக்கம். அதே போன்று இந்த வருடமும் நாளை மறுநாள் (19-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) அரசு அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை மதுரை, திண்டுக்கல், சேலம், சிவ–கங்கை ஆகிய மாவட்டங்க–ளில் இருந்து சுமார் 600 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் 207 பேர் கலந்து கொள்கின்ற–னர். போட்டியில் தங்க காசு, வெள்ளி காசு, கட்டில், குளிர்சாதன பெட்டி, எல்இடி டி.வி., பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் சிறந்த ஜல்லிக்கட்டு காளை–களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வராஜ், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் குணசேகரன், கால்நடை உதவி இயக்குனர் கணபதி பிரசாத், நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மனோகர் ஆகியோர் வாடி–வாசல் மற்றும் ஜல்லிக் கட்டு போட்டிக்கான முன் னேற்பாடு பணிகளை பார் வையிட்டனர். விழாவிற்கான ஏற்பாடு–களை கிராம பட்டைய–தார்கள் மாரிமுத்து, தங்கையன், அண்ணாவி, சங்கர், நவீன், சசிகுமார், லட்சு–மணன், நரசிம்மன், ஊராட்சி மன்ற தலைவர் எமல்டா லில்லி கிரேசி ஆரோக்கியசாமி, துணைத் தலைவர் பன்னீர், முன்னாள் துணைத் தலைவர் ஐயப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


    Next Story
    ×