search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய நூலக வார விழா
    X

    தேசிய நூலக வார விழா

    • தேசிய நூலக வார விழா நடைபெற்றது
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    திருச்சி

    திருச்சி மேலகல்கண்டார் கோட்டை ஆலத்தூர் கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா புலவர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் சிவலிங்கம் , கோபால கிருஷ்ணன், அரசினர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, தூயமரியன்னை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வாசகர்கள் கலந்து கொண்டனர். இதில் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு நூலகத்தில் உறுப்பினராக இணைவதற்கு மோகன் மற்றும் திருமலை மதியழகன், சிவகுமார் ஆகியோர் நன்கொடை தொகை வழங்கினர். விழா முடிவில் ஆலத்தூர் நூலகர் சிவகுமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×