என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மகள் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை
- மகள் பாம்பு கடித்து இறந்த துக்கம் தாங்காமல தாய் விஷம் குடித்தார்
- தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார்
திருச்சி
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீழ கண்ணுப்பட்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி காயத்ரி. இந்த தம்பதியருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரீத்தி என்ற சிறுமி பாம்பு கடித்து பரிதாபமாக இறந்து விட்டார். மகளின் இழப்பை தாய் காயத்ரியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளான காயத்ரி பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.பின்னர் அவரது கணவர் ராஜேந்திரன் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பல அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்