search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தை பெரியார் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
    X

    தந்தை பெரியார் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

    • தந்தை பெரியார் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
    • 49-வது நினைவு நாள்

    திருச்சி:திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் க.வைரமணி ஒருஅறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,தந்தை பெரியாரின் 49வது நினைவு நாளான நாளை 24-ந் தேதி சனிக்கிழமை காலை 08.30 மணியளவில் மத்திய மாவட்ட திமுக சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் செயல்வீரர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு தந்தை பெரியாருக்கு நினைவஞ்சலி செலுத்திட வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×