search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துறையூரில் லாட்டரி விற்பனை செய்தவர் கைது
    X

    துறையூரில் லாட்டரி விற்பனை செய்தவர் கைது

    • நுண்ணறிவு பிரிவிற்கு ரகசிய தகவல் சென்றது
    • ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அடிவார பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்வதாக திருச்சி ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவிற்கு ரகசிய தகவல் சென்றது. இதனை அடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் அடிவாரப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் கீரம்பூர் கிராமத்தை ராஜ்குமார் (37) என்பதும், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து ராஜ்குமாரை கைது செய்த துறையூர் போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 25 லாட்டரி சீட்டுகள், லாட்டரி விற்ற பணம் ரூ. 550 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×