search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லோடு ஆட்டோ மோதிபள்ளி மாணவன் பலி
    X

    லோடு ஆட்டோ மோதிபள்ளி மாணவன் பலி

    • திருச்சி மணிகண்டத்தில் லோடு ஆட்டோ மோதி பள்ளி மாணவன் பலியானார்
    • மணிகண்டம் போலீசார் விசாரணை

    ராம்ஜிநகர்,

    திருச்சி நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வீக ராஜ், விவசாயி. இவரது மகன் சச்சின் ஜோசர் (வயது 14). இவர் திருச்சி மதுரை சாலை நாகமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் மின்சார இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று பள்ளிக்குச் சென்ற இவர், பள்ளி முடிந்தவுடன் டியூஷன் சென்று முடித்துவிட்டு தீரன் மாநகரில், இருந்து நவலூர்குட்டப்பட்டு செல்லும் சாலையில் கலிங்கிபட்டி என்ற இடத்தில் வந்தார். அப்போது எதிரே மணப்பாறையில் இருந்து நாகமங்கலம் நோக்கி வந்த லோடு ஆட்டோ மோதியது. இதில் சச்சின் ஜோசர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து விட்டார்.

    இதனை அறிந்த மணிகண்டம் போலீசார் பள்ளி மாணவனின் உடலை கைப்பற்றி உடல் கூராய்வுக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து லோடு ஆட்டோ டிரைவர் மணப்பாறை பெரியப்பட்டியை சேர்ந்த முத்துவேல் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×