என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிவாளால் கழுத்தில் வெட்டுபட்டு விவசாயி சாவு
    X

    அரிவாளால் கழுத்தில் வெட்டுபட்டு விவசாயி சாவு

    • கழுத்தில் அரிவாள் தவறுதலாக பட்டதால் விவசாயி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
    • கால்நடைக்கு புல் அறுத்த போது பரிதாபம்

    திருச்சி,

    திருச்சி குழுமணி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 34 ). இவர் கால்நடைகள் வளர்த்து வந்தார். இதை யடுத்து அந்தப் பகுதியில் வழக்கம் போல் கதிர் அறுக்கும் அரிவாள் மூலம் புற்களை வெட்டினார்.அப்போது தவறுதலாக அரிவாள் கழுத்தில் பட்டு பலத்த காயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் கோபி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது பெரியம்மா செல்லம்மாள் ஜீயபுரம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×