என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் பணியாளரை மிரட்டி பணம் பறிப்பு
- திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் பணியாளரை மிரட்டி பணம் பறிப்பு சம்பவம் நடைபெற்று உள்ளது
- பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்
திருச்சி,
திருச்சி காவேரி ரோடு கீழதானம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்ததாக கீழ தேவதானத்தை சேர்ந்த குணா என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். இவர் ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் திருச்சி திருவெறும்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகன் அசோக் (வயது 35). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தஞ்சை பஸ்கள் நிற்கும் இடத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் அசோக்கிடம் பணத்தை பறித்து தப்ப முயன்றனர். அதற்குள் அசோக் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவர்கள் 3 பேரையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள் மணப்பாறையை சேர்ந்த கந்தசாமி, சிவகங்கை திருப்பத்தூர் சேர்ந்த நாகராஜ்,திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த கணேஷ் என்பது தெரிய வந்தது. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்