என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சியில் சாலை விபத்தில் டிரைவர் பலி - 3 பேர் படுகாயம்
- காரினை கிருஷ்ணகிரி கோப்பரேட் காலனி பகுதியைச் சேர்ந்த ஷேக் பாஷா ( 28) என்பவர் ஓட்டிச் சென்றார்
- காரும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
திருச்சி :
கடலூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா (வயது 35). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பிரசன்னா தனது மனைவி மற்றும் ஐந்து வயது குழந்தையுடன் வாடகை காரில் ஊர் திரும்பினார்.
காரினை கிருஷ்ணகிரி கோப்பரேட் காலனி பகுதியைச் சேர்ந்த ஷேக் பாஷா ( 28) என்பவர் ஓட்டிச் சென்றார்.இந்தக் கார் இன்று அதிகாலை 5 மணி அளவில் திருச்சி உத்தமர் கோவில் ரயில்வே மேம்பாலம் அருகே வந்த போது விபத்தில் சிக்கியது.
காரும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது.இந்த இடுப்பாடுகளில் சிக்கிய சேக் பாஷா பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரில் பயணித்த பிரசன்னா, மனைவி, ஐந்து வயது குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் மூன்று பேரையும் மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து கொள்ளிடம் டோல்கேட் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்