search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர் காப்பீட்டுக்கு அடங்கல் சான்று கிடைப்பதில் தாமதம் - விவசாயிகள் கவலை
    X

    டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர் காப்பீட்டுக்கு அடங்கல் சான்று கிடைப்பதில் தாமதம் - விவசாயிகள் கவலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையில் இருந்து போதுமான அளவுக்கு தண்ணீர் கிடைக்குமா ?என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    • ஆனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் ஏழை விவசாயிகளுக்கு அடங்கல் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் சாரதாமதம் செய்வதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    திருச்சி

    டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையில் இருந்து போதுமான அளவுக்கு தண்ணீர் கிடைக்குமா ?என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில்

    பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா (பிஎம்எப்பிஒய்) திட்டத்தைத் தவறாமல் தேர்வு செய்யுமாறு வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த பயிர்க் காப்பீட்டு பிரீமியத்தில் தங்களின் பங்காக சாகுபடி செய்யும் இடத்தைப் பொறுத்து ஏக்கருக்கு ரூ.1600 செலுத்த வேண்டும்.

    மீதமுள்ள காப்பீட்டு பிரீமியம் தொகைமத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செலுத்தும். தண்ணீர் கிடைக்க பெறாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்தால் ஒரு ஏக்கருக்கு ரூ. 9 ஆயிர த்து 25 காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும்.

    மேலும் காப்பீடு செய்யப்பட்ட பயிர் விதைப்பு நிலையிலேயே தண்ணீர் இல்லாமல் வாடிவிட்டாலோ, சாகுபடியாளரால் முடிக்க முடியாமல் போனால் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 36,100 ரூபாய் வரை இழப்பீடாக விவசாயிகளுக்கு கிடைக்கும். இதற்கிடையே சம்பா பயிர் காப்பீட்டுக்கு வருகிற 15 ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பயிர் காப்பீடு செய்வதற்கு முக்கிய ஆவணமான அடங்கல் சான்றிதழ் கிடைக்க காலதாமதம் ஆகி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது பயிர் காப்பீடு ஒன்றே டெல்டா விவசாயிகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ள காரணத்தினால் சம்பா பயிர் காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்ய அனைத்து விவசாயிகளும் முடிவு செய்து அடங்கல் ஆவணத்தை பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர்.

    ஆனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் ஏழை விவசாயிகளுக்கு அடங்கல் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் சாரதாமதம் செய்வதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, டெல்டாவில் சாதாரண நிலப்பரப்பில் இதுவரை 6 லட்சம் ஏக்கரில் சம்பா பயிருக்கு காப்பீடு கோரப்பட்டுள்ளது. காலக்கெடு குறைவாக இருக்கின்ற காரணத்தினால் விவசாயிகளுக்கு உடனடியாக அடங்கல் சான்று கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×