search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் ஆண் - பெண் பிணங்கள்
    X

    திருச்சியில் ஆண் - பெண் பிணங்கள்

    • திருச்சி மத்திய பஸ் நிலையம் - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இரண்டு பிணங்கள்
    • போலீசாரால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

    திருச்சி,

    திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஹோட்டல் அருகாமையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று கிடப்பதாக கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன் தன்ராஜ் கண்டோன்மென்ட் போலீசுக்கு புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிரேத கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இதேபோன்று திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டில் அருகாமையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் கணேசன் அரசு மருத்துவமனை போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் ஜோதி பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    Next Story
    ×