search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு பணியாளர்களுக்கு அஞ்சல் வழி பட்டய பயிற்சி
    X

    கூட்டுறவு பணியாளர்களுக்கு அஞ்சல் வழி பட்டய பயிற்சி

    • திருச்சி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தின் 2022-23ம் ஆண்டுக்கான 22வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் கீழ்க்கண்ட அட்டவணையின் அடிப்படையில் பயிற்சியாளர்கள் சேர்க்கைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
    • கூட்டுறவு சங்க பதிவாளரால் அனுமதிக்கப்பட்ட ஆணையில் கூட்டறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மட்டும் அஞ்சல்வழி பயிற்சி அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திருச்சி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தின் 2022-23ம் ஆண்டுக்கான 22வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் கீழ்க்கண்ட அட்டவணையின் அடிப்படையில் பயிற்சியாளர்கள் சேர்க்கைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    அதன் படி 19.07.2022 முதல் 28.07.2022 வரை (விடுமுறை நாட்கள் நீங்கலாக) விண்ணப்ப மனு விற்பனை செய்ய படுகிறது. 1-ந் தேதி (மாலை 5.30 மணி வரை) விண்ணப்ப மனு மீள சமர்ப்பிக்கலாம். 2-ந் தேதி மற்றும் 4-ந்தேதி விண்ணப்பங்கள் சரி பார்த்தல் நடை பெறுகிறது. 8-ந்தேதி பயிற்சி தொடங்குகிறது.

    இந்த அஞ்சல்வழி கூட்டுறவு பட்டயப்பயிற்சியில் கூட்டுறவு சங்க பதிவாளரால் அனுமதிக்கப்பட்ட ஆணையில் கூட்டறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மட்டும் அஞ்சல்வழி பயிற்சி அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    2022-2023ஆம் ஆண்டு 22வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு பயிற்சிக்கட்டணம் ரூ.15,050- ஆகும்.மேலும் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், மாவட்டத்திலுள்ள பதிவாளர் மற்றும்செயற்பதிவாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் தகுதியுள்ளவர்களை மட்டும் அஞ்சல்வழி பயிற்சியில் சேர்க்க கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×