என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் செல்போனுக்கு தடை
- திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது
- ராஜகோபுரம் , கோயில் நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது
மண்ணச்சநல்லூர்,
தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆலயங்களின் கருவறையில் உள்ள தெய்வ சிலைகளின் புகைப்ப டங்கள், வீடியோக்கள் வெளியாகின்றன. இதே போல திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் கருவறையை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதும் அதிகமாகி வருகிறது. கோவிலில் பணிபுரியும் சிலர் வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர். இதன் காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோயில் இணை ஆணையர் கல்யாணி கோயிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை என ராஜகோபுரம் , கோயில் நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்.
பக்தர்களின் வசதிக்காக செல்போன், வீடியோ சாதனங்கள் வைப்பதற்கு விரைவில் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே பக்தர்கள் செல்போன் மற்றும் கேமிரா உள்ளிட்ட, மின் சாதனங்களை கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தடையை மீறி கொண்டு வரும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்