என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிபி.ஐ. வழக்கில் தொடர்புடையவர் மீது வழக்கு
- சிபி.ஐ. வழக்கில் தொடர்புடையவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
- கோர்ட்டில் கையெழுத்து இடவில்லை
திருச்சி:
திருச்சி காந்தி மார்க்கெட் ராவுத்தர் சந்து பகுதியை சேர்ந்தவர் பிரேம் சந்தர் மோபியா. இவர் மீது மோசடி தொடர்பாக சி.பி.ஐ. கைது செய்துள்ளது. அந்த வழக்கில் ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளில் திருச்சி கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற உத்தரவுடன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இந்த மாதம் திருச்சி கோர்ட்டில் கையெழுத்து இடவில்லை. இதனை தொடர்ந்து முதன்மை குற்றவியல் நீதிமன்ற அலுவலக தலைமை எழுத்தர் ஆண்டாள் அளித்த புகாரின் பேரில் செஷன்ஸ் கோர்ட் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம் சந்தரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






