search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் டிரைவர் மயங்கி விழுந்து சாவு
    X

    கார் டிரைவர் மயங்கி விழுந்து சாவு

    • திருச்சியில் திடீரென கார் டிரைவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்
    • ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் நாடிமுத்து (வயது 48). கார் டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்த நாடிமுத்து திடீரென்று தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×