என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
- தில்லைநாயகம் படித்துறையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம்
- கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை
திருச்சி,
திருச்சி காவிரி ஆறு தில்லைநாயகம் படித்துறையில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து தேவதானம் கிராம நிர்வாக அதிகாரி அனீஸ் பாத்திமா கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






