search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. பிரமுகருக்கு கத்திக்குத்து
    X

    பா.ஜ.க. பிரமுகருக்கு கத்திக்குத்து

    • பாலக்கரையில் பா.ஜ.க. பிரமுகருக்கு கத்திக்குத்து விழுந்தது
    • பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை தேடி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி பாலக்கரை எடத் தெரு நெய்க்கார தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43). கேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவரான இவர் அப்பகுதி 33-வது வார்டு பா.ஜ.க. தலைவராக உள்ளார்.கண்ணன் அங்குள்ள ஒரு வீட்டின் தரைதளத்தில் வசித்து வருகிறார். முதல் தளத்தில் அருண்குமார் என்பவர் வசிக்கிறார். இந்த நிலையில் மேல்மாடிக்கு கண்ணனின் தாயார் சென்றபோது அருண்குமார் தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பினார்.இதை கண்ணன் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் மற்றும் நண்பர்கள் 2 பேர் சேர்ந்து கண்ணனை கத்தியால் குத்தினர்.இதில் கண்ணனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை யடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து கண்ணன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×