search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு
    X

    நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு

    • மணிகண்டம் அருகே 14 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு
    • திருச்சி கலெக்டரிடம், பொதுமக்கள் புகார் மனு

    திருச்சி,

    திருச்சி மணிகண்டம் ஒன்றியம் திருமலை சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் பட்டியத்தார் பிச்சை மூக்கன், கணேசன், சிவக்குமார், கதிர்வேல், சுப்பிரமணி, கௌதமன் முன்னிலையில் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து இன்று ஒரு புகார் மனு அளித்தனர்.அதில்,திருமலை சமுத்திரம் கிராமத்தில் புல எண் 95 ல்14 ஏக்கர் நீர் நிலை புறம்போக்கு உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு இன்றைய சந்தை மதிப்பில் ரூ. 15 கோடி அளவுக்கு இருக்கும். இதனை வெளியூரை சேர்ந்த சில நபர்கள் மனைகளாக பிரித்து முள்வேலி அமைத்து ஏக்கர் கணக்கிலும் வீட்டுமனை அளவிலும் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த இடம் வாரி புறம்போக்கு ஆகும். எனவே நீர்நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×