search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலில் திருட முயன்ற வாலிபர் கைது
    X

    கோவிலில் திருட முயன்ற வாலிபர் கைது

    • ஸ்ரீரெங்கம் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது
    • கோவிலில் திருட முயன்ற வாலிபர் கைது ெசய்யப்பட்டனர்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் புது தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 46). இவர் அங்காளம்மன் கோவிலில் பூசாரி ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செல்வத்திடம் வாலிபர் ஒருவர் வந்து வாய் புண் நோய் இருப்பதாக கூறி, விபூதி தருமாறு செல்வத்திடம் கேட்டுள்ளார். இதனை உண்மை என நம்பிய கோவில் பூசாரி, விபூதியை கொடுத்துவிட்டு உள்ளே சென்றார்.

    அப்போது அந்த வாலிபர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் குடத்தை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார். இதனைப் பார்த்த பூசாரி அதிர்ச்சி அடைந்து சத்தம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இளைஞரை பிடித்து வைத்துக்கொண்டு துறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை செய்ததில் அவர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (21) என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக கோவில் பூசாரி செல்வம் என்பவர் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் நகரப் பகுதியில் பட்டப்பகலில் கோயிலில் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×