search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து 8.5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை
    X

    வீட்டின் பூட்டை உடைத்து 8.5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை

    • திருச்சி காட்டூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 8.5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
    • கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை

    திருவெறும்பூர்,

    திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர் (48) இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலச்சந்தரின் மனைவி ஓசூரில் உள்ள புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டி விட்டு

    தனது இரு மகன்களுடன் ஓசூர் சென்றுவிட்டார்.பின்னர் அவர் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் இருந்த 8.5 சவரன் தங்க நகை மற்றும் 1.5 கிலோ மதிப்புள்ள 2 வெள்ளி பாத்திரங்கள், விலை உயர்ந்த வாட்ச் மற்றும் கம்ப்யூட்டருக்கு பயன்படுத்த கூடிய மோடம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.இது குறித்து பாலச்சந்தரின் மனைவி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்து சென்றனர்.இது குறித்து பாலச்சந்தர் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×