search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல் சூளையில் குழந்தைகள் உட்பட 6 கொத்தடிமைகள் மீட்பு
    X

    செங்கல் சூளையில் குழந்தைகள் உட்பட 6 கொத்தடிமைகள் மீட்பு

    • லால்குடி அருகே செங்கல் சூளையில் குழந்தைகள் உட்பட 6 கொத்தடிமைகள் மீட்பு
    • செங்கல் சூளை அதிபர் மீது லால்குடி போலீ சார் வழக்கு பதிவு செய்து ள்ளனர்

    திருச்சி,

    திருச்சி லால்குடி திருமண மேடு ராஜ கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32).இவர் அந்தப் பகுதியில் செங்கல் சூளை வைத்து நட த்தி வருகிறார். இதில் தொழி லாளர்களை கொத்தடி மையாக நடத்துவதாகவும், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உள்ள தாகவும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தக வல் கிடைத்தது.உடனே அவர் லால்குடி உதவி கலெக்டருக்கு தகவல் கொடுத்தார். அதைத் தொட ர்ந்து வருவாய்த் துறையினர் அந்த செங்கல் சூளையில் அதிரடி சோதனை நடத்தி னர்.அப்போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை கொத்தடி மையாக நடத்தி வந்ததும், குழந்தை தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தி இருந்ததும் உறுதி செய்யப்ப ட்டது.பின்னர் வருவாய்த் துறையினர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கடைமுடி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த அய்யனார் (வயது 24), அவரது மனைவி மாரியம்மாள் (21),மற்றும் அந்த தம்பதியரின் குழந்தைகள் மகாலட்சுமி( 3) பரமசிவ(2)அதே பகுதியைச் சேர்ந்த சுப்பன் மகள் ஆதிலட்சுமி (11) ஏழுமலை (10) ஆகிய 6 பேரையும் அவர்களின் சொந்த ஊரு க்கு அனுப்பி வைக்க நட வடிக்கை எடுத்து வருகி ன்றனர்.இது தொடர்பாக குழ ந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் செங்கல் சூளை அதிபர் மீது லால்குடி போலீ சார் வழக்கு பதிவு செய்து ள்ளனர்.லால்குடி செங்கல் சூளை யில் கொத்தடிமைகள் மற்றும் குழந்தை தொழிலா ளர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    Next Story
    ×