search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு
    X

    அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு

    • ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
    • அதன்படி நடப்பாண்டிற்கான கலந்தாய்வு வருகிற 8-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான கலந்தாய்வு வருகிற 8-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கலந்தாய்வில் பங்குபெறும் ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எமிஸில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

    ெதாடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் உபரி பணியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் தமிழ்-12, ஆங்கிலம்-3, கணிதம்-13, அறிவியல் -17, மறறும் சமூக அறிவியல் -4 பணியிடங்கள் என 49 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் 5, தருமபுரி மாவட்டத்தில் 45, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 179 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதுபோல் உபரியாக கண்டறி யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு வருகிற 17-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலியாக உள்ள பணியிடங்களுக்கும், கூடுதல் தேவையுள்ள இடங்க ளுக்கும் பணிமூப்பு அடிப்ப டையில் கலந்தாய்வு நடத்தப்ப டும். மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு வருகிற 20-ந்தேதி நடைபெ றும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×