search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
    X

    அரூர், தனியார் வங்கி முன்புறம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை படத்தில் காணலாம்.


    அரூர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

    • வாடிக்கையாளர்கள் நினைத்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
    • கடைக்காரர்கள் அவர்களின் இடத்தையும் தாண்டி, சாலைவரை ஆக்கிரமிப்பு செய்து பொருட்களை வைத்துள்ளனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் பைபாஸ் சாலையில், 4 ரோட்டிலிருந்து ரவுண்டானா வரை, கடைகள், தாலுகா ஆபீஸ், மற்றும் வங்கிகள் முன்புறம் நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் நினைத்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். குறிப்பாக காலை நேரங்களில் கடைகளின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

    மேலும் கடைக்காரர்கள் அவர்களின் இடத்தையும் தாண்டி, சாலை வரை ஆக்கிரமிப்பு செய்து பொருட்களை வைத்துள்ளனர்.

    எனவே உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வாகனங்களை நிறுத்த குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கிடு செய்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் குறையும்.

    எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×