என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் குப்பை அள்ள டிராக்டர்களை வழங்கிய போது எடுத்த படம்.
சூளகிரி ஒன்றியத்தில் டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி
- சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு 3 குப்பை எடுக்கும் டிராக்டர், வண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- ஊராட்சிகளுக்கு குப்பை எடுக்கும் டிராக்டர் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதி சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு 3 குப்பை எடுக்கும் டிராக்டர், வண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமையில் பேரண்டபள்ளி, சூளகிரி, பேரிகை ஆகிய ஊராட்சிகளுக்கு குப்பை எடுக்கும் டிராக்டர் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ)கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) விமல் ரவிக்குமார் ஒன்றிய குழு உறுப்பினர் நாகேஷ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சசிகலா பாக்கியராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்செல்விராஜா ராஜம், பேரண்டபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா, ஊராட்சி துணைத் தலைவர் நஞ்சப்பா, செயலர் செல்வராஜ், சூளகிரி ஊராட்சி மன்ற தலைவர் கலைசெல்வி ராமன், பேரிகை ஊராட்சி மன்ற தலைவர் பிரவின்குமார், கட்சி நிர்வாகிகள் ராமசந்திரன் ஹரி, செல்வம், சித்ராஜ், ஆகியோர் உடன் இருந்தனர்.






