search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் நிழல் இல்லாத நாள் காண குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    நிழல் இல்லாத நாளை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு வியப்படைந்தனர்.

    கொடைக்கானலில் நிழல் இல்லாத நாள் காண குவிந்த சுற்றுலா பயணிகள்

    • நிழல் நேர்கோட்டு பகுதியில் செங்குத்தாக விழும் நாள் நிழல் இல்லாத நாள் ஆகும்.
    • சூரியன் தலைக்கு மேல் இருக்கும் போது நிழலானது எந்த பக்கமும் சரியாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும்.

    கொடைக்கானல்:

    ஆண்டுக்கு 2 முறை மட்டும் நிகழக்கூடிய அரிய நிகழ்வான நிழல் இல்லாத நாள் நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் மட்டும் தென்பட்டது. பூமியானது 23 டிகிரி சாய்ந்து அட்ச ரேகையில் சுற்றியபடி சூரியனையும் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றும் போது சூரியனை நோக்கி சாய்ந்து இருக்கும் கோணமும் சிறிது சிறிதாக மாறிக்கொண்டே இருக்கும். அவ்வாறு மாறும் போது ஒரு சில நாட்களில் மட்டும் பூமியின் அச்சு சூரியனை நோக்கி சாயாமல் பக்கவாட்டில் இருக்கும். அப்போது நிழல் நேர்கோட்டு பகுதியில் செங்குத்தாக விழும் நாள் நிழல் இல்லாத நாள் ஆகும்.

    மேலும் இந்த நாள் பூஜ்ஜிய நிழல் நாளாக அமைகிறது. இந்த நிகழ்வி னை கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் நண்பகல் 12.20 மணியளவில் சூரியன் தலைக்கு மேல் இருக்கும் போது நிழலானது எந்த பக்கமும் சரியாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும். அல்லது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அருகிலேயே விழும் நிகழ்வினை வான் இயற்பி யல் ஆராய்ச்சியாளர் எபிநேசர் காட்சிப்படு த்தினார். மேலும் இந்த அரிய நிகழ்வினை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    மேலும் இது போன்ற நிகழ்வு வரும் ஆகஸ்ட் மாதம் 26- ஆம் தேதி 12.22 மணிக்கு நிகழ உள்ளதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×