search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சுற்றுலாபயணிகள்
    X

    போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சுற்றுலாபயணிகள்

    • ஊட்டியில் குவியும் வாகனங்கள்
    • நிரந்தர தீர்வு காணப்படுமா?

    ஊட்டி:

    கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலா தலமான ஊட்டிக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஊட்டியில் ஆயிர க்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

    சுற்றுலாபயணிகள் வருகையால் நேற்று பல இடங்களில் வாகன நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பல சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இருந்தா லும் பெரும்பாலான சாலை களில் வாகன நெரிசல் காணப்பட்டது.

    குறிப்பாக, தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் மக்கள் கூட்டம் மட்டுமின்றி வாகன நெரிசலும் ஏற்பட்டது.நெரிசலில் சிக்கி சுற்றுலாபயணிகளும், உள்ளூர் காரர்களும் குறித்த நேரத்தில் ெரயில்வே நிலை யத்துக்கும், கோவையிலுள்ள விமான நிலையத்துக்கும் செல்ல முடியாமல் அவதிக்குள்ளானார்கள்.

    ஊட்டி நகரில் தினந்தோறும் அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்தை சரி செய்ய போதிய எண்ணிக்கையில் போலீசாரும் நிறுத்தப் படுவதில்லை. ஒரு முறை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்தால் நிலைமை சீராவதற்கு 2 மணிநேரம் கூட ஆகிறது.

    வார இறுதி நாட்களில், நாள்தோறும், 15 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர். இதனால், வாகன நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்களை 'பார்க்கிங்' செய்ய இடமில்லாததால், வாகனங்களை சாலையில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

    ஊட்டியில் பார்க்கிங் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் எந்த திட்டமும் செயல்ப டுத்தப்பட வில்லை என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். பல திட்டங்கள் வரும் என எதிர் பார்த்து ஊட்டி மக்களும் சோர்ந்து போய் விட்டனர்பல அடுக்கு வாகன நிறுத்தம் இதற்கு முடிவு கட்டும் ஆனால் யார் செயல்படுத்துவார்கள், எப்போது செயல் படுத்துவார்கள் என்பது விடை தெரியாத கேள்வி யாகவே தொடர்கிறது

    Next Story
    ×